Tuesday 22 February 2011

அஜ்மலுக்கு தூக்கு!! அத்வானிக்கு இல்லையா?



அஜ்மல் கசாபிற்கு தூக்குதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று காவி ரத்த காட்டேரிகள் ஊளையிட தொடங்கியுள்ளனர், அஜ்மல் கசாப் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் அந்த தீர்ப்பை வழங்கி இருந்தால் குற்றவாளி தண்டிக்க படவேண்டும் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை, தவறு செய்கிறவன் முஸ்லிமாக இருந்தால் மட்டும் அவனை வைத்து இஸ்லாத்தையும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் களங்கப்படுத்தலாம் என்ற ஒரே நோக்கத்திற்காக தேச பக்தியை கையில் எடுப்பதை காவி வகையறாக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர், பாகிஸ்தான் கிரிகெட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று மும்பைக்கு வந்தால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று விளையாட்டிலும் தேசபக்தி போர்வையில் மத சாயம் பூசமுயலும் தாக்கரேக்கள், தமிழர்களையும், இந்திய மீனவர்களையும் கொன்று குவிக்கும் இலங்கைக்கு எதிராக தன் தேசபக்தியை? காண்பிக்காதது ஏன்? , இவர்களுக்கும் தேசபக்திக்கும் எள்ளளவும் சம்மந்தம் இல்லை என்பது தான் வரலாறு, தேசத் தந்தை காநிதியை கொன்றதில் இருந்தும், ஆங்கிலேயர்களுக்கு ஆள்காட்டியாக இருந்ததிலிருந்தும்  இவர்களுடைய தேசபக்தியை வரலாறு வட்டம் போட்டு காட்டுகிறது, அஜ்மல் கசபை தூக்கிலிடும் அதே சமயத்தில், குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொண்று குவித்த மோடியையும், ரதயாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்திய அத்வானியையும், சமீபத்திய எல்லா குண்டு வெடிப்புகளுக்கும் காரணமான, பிரக்யா தாகூர், அசிமானந்தா மற்றும் அதில் தொடர்புடைய ஆர்,எஸ்,எஸ், தலைவர்கள் அனைவரையும் தூக்கிலிடவேண்டும், அதுதான் நியாமான தீர்ப்பாகவும் இருக்கும் மதசார்பின்மையையும் உலகுக்கு பிரதிபலிக்கும், எங்கெல்லாம் நீதி சாகடிக்கப்பட்டு சாயம் பூசப்படுகிறதோ அங்கெல்லாம் அதன் தீய விளைவுகள் தீப்பற்றிக்கொள்ளும் என்பதை, நீதிமான்கள் உணரவேண்டும், 


இந்து முன்னனியினரின் பாசிச வெறிக்கு பதிலடி- மதுரை TNTJ வின் போஸ்டர்!