Friday 25 February 2011

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?




கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் 32 பற்களும் தெரிய சிரிக்கிறார் சமுதாய மானம் காக்க புறப்பட்ட ஒரு சமுதாய தலைவர். கேவலம்3 சீட்டு கொடுத்ததற்கே இந்த சிரிப்பு என்றால் கொஞ்சம் அதிகமாக கொடுத்து இருந்தால் திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசிவாங்கியதைப் போல ஆசி வாங்கியிருப்பார் போலத் தெரிகிறது. முதலில் 15தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து விட்டு அதிலே 12 சீட்டு கேட்டார்களாம். பிறகு 12ல் இருந்து குறைத்து 7 க்கு வந்தார்களாம். அப்பறம் இன்னும் கொஞ்சம் குறைத்து 5க்கு வந்தார்களாம். அப்புறம் விடாப்புடியாக 5 தொகுதிதான் வேண்டும் என சிறுபிள்ளைகள் அடம்பிடிப்பது போல தரையில் உருண்டு புரண்டு அடம்பிடித்தார்களாம். ஆனால் இவர்களின் அழுகுரல்களைக் கேட்டு கொஞ்சம் கூட மனமிறங்காத கருணைத்தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்தா 3 தான் தருவேன் என ரொம்ப கறாராய் சொல்லி விட்டாராம்.
யார்கிட்ட உட்றீங்கானும் ரீலுஏற்கனவே 2 சீட்டு வாங்குறது தான் சமுதாய மானம் என சொல்லி கலைஞரிடம் உங்கள் மாப்பிள்ளை மிடுக்கை காட்டினீர்கள். அவரும் உங்கள் பலத்தை நினைத்து பயந்து பயந்து ஒரு சீட்டு தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த ஒரு சீட்டில் யார் போட்டிடுவது என கழகத்தின் நிரந்தர தலைவருக்கும்,நிரந்தர பொதுச்செயலாளருக்கும் குடுமிபிடி சண்டை வந்து விடக்கூடாது என்பதற்காக 2 சீட்டாவது தாங்க என மறுபடியும் போய் கதவைத் தட்ட அவர்கள் உங்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச்சாத்தி விட்டார்கள். அதற்குபிறகு தான் உங்களின் தனிபலத்தை நிறுபித்தீர்கள். அதாவது உங்கள் இயக்கத்திற்கு எத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியல் நீங்கள் வாங்கிய வாக்கு வங்கியின் மூலம் அம்பலமாக உங்கள் நிலை கண்டு சிரிக்காதவர்கள் யாருமில்லை.
இப்படி இருக்கையில் இந்த தேர்தலில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் இப்போது கூட்டணி சேர்ந்து கொண்டு இப்போது கொடுத்த 3சீட்டை இப்படி கேவலமாக பல்லிளித்து வாங்கிக் கொண்டு போஸ் கொடுக்கிறீர்கள். இதுல வேற அண்ணன் பன்னீர் செல்வம் கையப் புடிச்சிக்கிட்டு கெஞ்சினாராம். அம்மாவைப்பத்தி தெரியாதவர்களிடம் வேண்டுமானால் உங்களின் கும்மாஞ்சி வேலைகள் பலிக்கும். கருணாநிதி வேண்டுமானால் இழுவை போட்டுப் பார்ப்பார். ஆனால் ஜெயாவைப் பொருத்தவரை வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என ஒரே போடாக போடக்கூடியவர் எனபது எல்லாருக்கும் தெரியும். வேனுமினா 3 சீட்ட வாங்கிக்கொள்ளுங்கள்,இல்லாவிட்டால் நடையைக்கட்டுங்கள் என அம்மா சொல்லியிருப்பார். உடனே கழகத்தின் நிரந்தர தலைவருக்கும்நிரந்தர பொதுச்செயலாளருக்கும் போட்டியிட2 சீட்டு கிடைத்தால் போதும் என்ற ரீதியில் நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருப்பீர்கள். காரணம் உங்கள் சிரிப்பே ஆயிரம் கதை சொல்கிறது தலைவரே!
மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன் என்று தமுமுகவின் தளத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு சால்ஜாப்பு சமாளிப்பு பதில்கள் அவர்கள் தளத்தில் இருக்கிறது. ஆனால் உண்மையாக இந்த கேள்விகளுக்கு அவர்கள் மனதில் என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனையான பதில்கள் இதோ.
கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?
ஏன்! ஏற்கனவே சமுதாய மானம் காக்கப்போறோமுனு சொல்லிக்கிட்டு குப்புற விழுந்து மீசையில் மண்ணு ஒட்டுனது போதாதா! மறுபடியும் இந்த அம்மாகிட்டையும் வம்ப இழுத்துட்டு வரிஞ்சிகட்ட்டிக்கிட்டு நின்னா என்ன ஆகும்னு நல்லா தெரியும். அதனால தான் வந்த வரைகும் லாபம்னு 3வாங்கிக்கிட்டோம். நல்லவேளை இதுவாவது கெடச்ச்தே.
கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது,விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?
ஆமாம்! கூடுதல் தொகுதி வேண்டி அதிமுகவை கண்டித்து தாம்பரத்தில் சாலைமறியல் போராட்டம்மெரினாவிலே சிறை நிரப்பும் போராட்டம்,சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம்,அவ்வைசண்முகம் சாலையில் அமைந்துள்ள‌ அதிமுக தலைமை அலுவலக வாசலில் உக்கார்ந்து கொண்டு யாரும் உள்ளே செல்லக்கூடாது என பாதைமறியல் போராட்டம். விமர்சிப்பவர்களைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதேபோல மக்களைப் பற்றியும் கவலையில்லை. எங்கள் கவலையெல்லாம் இந்தமுறையாவது கொஞ்சம் அதிகமா ஓட்டு வாங்கமுடியுமான்னு தான்.
கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?
முதலில் எங்களைக் காத்துக் கொள்கிறோம். அப்பறம் பாக்கலாம் சமுதாயம் குறித்து
கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும்புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..
ஆமா..ஆமா..கின்னஸ் சாதனை இல்லையா? சமுதாய அரசியல்வாதிகள்பாராட்டுகிறார்களா? ஆனால் அவர்கள் எங்களுக்குஓட்டுபோடுவார்களா?
கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாகசொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும்முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..
அப்படியா! பரவாயில்லையே! எங்களுக்கே தெரியாத விசயமெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! பேஷ்..பேஷ்..!
கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...
நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியை ஒப்பிடும் போது எங்களுக்கு 3என்பது அதிகம் தான்.
கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...
நாங்க எப்பய்யா வேனாமுனு சொன்னோம்! இன்னொரு நாள் போயி பேசலாமுனு நெனைக்கும் போது தான் கலைஞர் கதவ சாத்திட்டாரே! அப்படியிருந்தும் தலைவர் துபாயில்பொதுச்செயலாளர் சவூதியிலும் இருப்பதால் அவர்கள் வந்து பேசுவார்கள் என அறிக்கையெல்லாம் விட்டுப்பார்த்தோம். ஆனால் எதற்குமே மசியவில்லை கலைஞர்
கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும்ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?
அதைப்பற்றியெல்லாம் கண்டுகொண்டால் காலத்தை ஓட்ட முடியுமா?அரசியல்னு வந்துட்டா இது போன்ற அம்புகளையெல்லாம் தாங்கித்தானே ஆகனும்.அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...,
 நன்றி:www.poyyantj.blogspot.com