Sunday 31 October 2010

மேலப்பாளையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்


30.10.2010 சனிக்கிழமை அன்று மேலப்பாளையம் பஜார் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலைப்பாளையம் கிளை சார்பாக பாபரி மஸ்ஜித் தீர்ப்புக்கு பின் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஏ. செய்யது அலீ தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பேச்சாளர் கே.எஸ். அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி “தனித்து நிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவைகள், சமூகப் புரட்சிகள் ஆகியவற்றைப் பற்றி சிறப்புரையாற்றினார். மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி “அயோத்தியா தீர்ப்பு ஓர் அலசல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்

Monday 25 October 2010

பெண்கள் பயான்

 கடந்த (17-10-2010) அன்று  16, அத்தியடி  கீழ  தெருவில்  பெண்கள்  பயான்  நடைபெற்றது    .
இதில் "தொழுகையின்  அவசியம் " மற்றும் "வாக்குறுதியை  பேணுவோம்"  என்ற  தலைப்பில்  அல் -இர்ஷாத்  ஆலிமாக்கள்  உரை  ஆற்றினார்கள்   .இதில்  திரளான  பெண்கள்  கலந்துகொண்ட்னர் .இந்த  நிகழ்ச்சி  33 வார்டு  TNTJ சகோதாரர்களால்  சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்

Tuesday 19 October 2010

செங்கல்பட்டில் கூடிய TNTJ வின் மாநில செயற்குழு!

17.10.2010 அன்று இறையருளால் செங்கல் பட்டு ஷஃபா மர்வா மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 

1. கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று அலகாபாத் நீதிமன்றம் 60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த பாபர் மஸ்ஜித் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் மீழ முடியாத அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது. அது இந்திய நாட்டின் அரசியல் சட்ட வரம்புகளைத் தாண்டி, இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணாக அளிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களின் வாழ்வுரிமையான வழிபாட்டு உரிமையை பறித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது.
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அக்கிரமும் ஆகும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்துகளை பதிவு செய்து தங்களுடைய கடுமையான ஆட்சேபணைகளையும் கண்டணங்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பை தங்களுடைய நீதிமன்ற அனுபவம், அறிவு ஞானம் எனும் உலைக்கூடத்தில் இராசயனப் பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது
1992 டிசம்பர் 6ந்தேதி அன்று இந்துத்துவா சங்கபரிவார வன்முறைக்கும்பல் பாபர் மஸ்ஜிதை அக்கிரமமாக இடித்து தரைமட்டமாக்கி தகர்த்தெரிந்தது.. இந்த அக்கிரம செயலை நீதிமன்றம் கண்டு கொள்ளாததுடன் அதைக் கண்டிக்காமலும் விட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பான கோரச் செயலை மன்னித்து அச்செயலை புனிமாக்கியுள்ளது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர் 1993 ஐனவரி 7ம் தேதி அன்று குடியரசுத் தலைவர் ஆணைப்படி பாபரி மஸ்ஜிதை சுற்றி அமைந்துள்ளநிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. பின்னர் அதை நாடாளு மன்றத்தில் சட்டமாகக் கொண்டு வந்தது..
அந்தச் சட்டத்தின் விதி எண் : 4 உட்பிரிவு (3) பாபரி மஸ்ஜித் தொடர்பான அனைத்து உரிமையியல் வழக்குகளை செல்லாதது என்று அறிவித்திருந்தது.
பாபரி மஸ்ஜித் வழக்கு குறித்து குடியரசுத் தலைவர் கேட்டிருந்த கருத்திற்கு உச்ச நீதிமன்றம் அக்டோபர் 24, 1994ல் அளித்த தீர்ப்பில் இந்த பிரிவை ரத்து செய்தது. அந்த தீர்ப்பின் போது முஸ்லிம்கள் சர்ச்சைக்குரிய நிலத்தை 1528 லிருந்து 400 ஆண்டுகாலமாக அனுபவித்து வந்துள்ளனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எதிரிடை அனுபவ உரிமை (Adverse possession) யை இது பாதிக்கச் செய்து பறித்து விடுவதால் இது செல்லாது என்று குறிப்பிட்டது. அதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றம் 30.09.2010 அன்று அளித்த இந்த தீர்ப்பு, உச்ச நீதி மன்றம் 1994 அக்டோபர் 24 அன்று அளித்த தீர்ப்பிற்கு எதிரானது.
ஒரு சொத்து குறித்த உரிமை தொடர்பான வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் போது அந்தச் சொத்து தனக்குச் சொந்தம் என்று நிரூபிக்க வேண்டிய பொருப்பும் கடமையும் சொத்தின் சொந்தக்காரர் மீது இல்லை. மாறாக இந்தச் சொத்திற்கு எதிராக யார் வழக்குத் தொடுக்கின்றாரோ அந்தப் பிரதிவாதியின் மீதுதான் அந்தப் பொறுப்பு இருக்கின்றது. இதுதான் இந்திய சாட்சிய சட்ட ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட 110 ன் விதியாகும். அலகாபாத் உயர்நீதிமன்றம் இதை அப்பட்டமாக மீறி உள்ளது. பாபரி மஸ்ஜிதின் உரிமையாளரும் அனுபவதாரருமான முஸ்லிம்களை வெளியில் தள்ளியதோடு மட்டுமல்லாமல் அவர்கள்தான் இந்த சொத்துக்கு உரியவர்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்பதை முஸ்லிம்கள் மீது சுமத்தி அவர்களிடமிருந்து இந்தச் சொத்தை அநியாயமாகப் பறித்துள்ளது.
தொல்லியல் ஆய்வு என்பது இந்திய சாட்சிய சட்டத்தின் கீழ் உள்ளதல்ல, நீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டதல்ல என்பது தெரிந்தும் அதையே முழு ஆதாரமாகக் கொண்டு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொல்லியல் ஆய்வு என்பது பாபரி மஸ்ஜித் இடிக்கப்படாத பட்சத்தில் சாத்தியமானதுமல்ல. பாபரி மஸ்ஜித் என்று ஒன்று அந்த இடத்திலேயே இல்லாதது போன்று தொல்லியல் ஆய்விற்கு உத்தரவிட்டு அதன்படியே தீர்ப்பும் அளித்தது அநியாயமும் அக்கிரமும் ஆகும். இது போன்று பாபரி மஸ்ஜித் என்றொரு கட்டிடம் இல்லாதது போன்றும் அது இடிக்கப்படாதது போன்றும் அந்த நிலத்தை மூன்று பங்காக பங்கு பிரித்திருப்பது இந்தத் தீர்ப்பின் மாபெரும் துரோகமாகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு அப்பாற்பட்டும், இந்திய அரசின் உயிர்மூச்சான மதச்சார்பின்மைக்கு எதிராகவும் பெரும்பான்மை மதத்தினரின் மூடநம்பிக்கை, புராணம், கற்பனை அடிப்படையிலும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மதநம்பிக்கை , புராணம் ,இதிகாசம் என்ற அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் இந்த அடிப்படையில் பிறமதத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் அல்லாமல் பிறருடைய சொத்துக்களை ஆக்கிரமிப்பதற்கும் அபகரிப்பதற்கும் இந்தத் தீர்ப்பு வழிகோலியுள்ளது. இப்படி இந்திய ஒற்றுமைக்கும் மதச் சார்பின்மைக்கும் வேட்டு வைப்பது இந்தத் தீர்ப்பின் மாபெரும் பாதக பயங்கர அம்சமாகும்.
சங்கப்பரிவாரம் இதுவரை எழுதியும் பேசியும் வந்த வசனத்தை அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பாக தந்துள்ளது. ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுவது போல் Judgment delivered justice not delivered (தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதி நியாயம் வழங்கப்படவில்லை) என்று இந்திய சட்ட வல்லுநர்கள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர்கள் குறிப்பிடுகின்ற அநியாயமான இந்தத் தீர்ப்பை முஸ்லிம் சமுதாயம் ஏற்கவில்லை. இனியும் ஏற்பதில்லை என்று கூறி இந்தத் தீர்ப்பை வன்மையாக கடுமையாக இந்தச் செயற்குழு கண்டிக்கின்றது.

2. ராமர் பிறந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டியது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு நேர்மாறானது. அது பள்ளிவாசலே இல்லை என்று கூறி இஸ்லாமிய மார்க்கத்திற்கு முட்டாள் தனமான விளக்கம் கொடுத்து இந்திய அரசியல் சட்டப்படி கூட தீர்ப்பளிக்க தகுதியற்ற நீதிபதி தரம்வீர் சர்மா வை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
3. பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து யாருக்கும் அஞ்சாமல் நியாயமான கருத்து தெரிவித்த முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரை இந்த செயற்குழு வெகுவாகப் பாராட்டுகின்றது.
4. இந்தத் தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மதம் கடந்து ஆர்ப்பரித்து குரல் எழுப்புகின்ற நடுநிலையாளர்கள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், ஊடகத் துறையினர் உட்பட அனைவருக்கும் இந்தச் செயற்குழு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
5. பாபர் மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு முடிவு செய்த பாபரி மஸ்ஜித் செயல்பாட்டுக் குழுவிற்கு (BMAC) இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
6. அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில் இதை வரவேற்ற திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், சமுதாய இயக்கங்கள், குறிப்பாக இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம் இது வெற்றியின் முதற்படிக்கட்டு என்று தனது முகத்திரையை கிழித்து தனது துரோகத் தனத்தை வெளிப்படுத்திய தமுமுக, மற்றும் மமக வை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
7. பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற அத்வானி போன்றோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மென்மையான அணுகு முறை யைக் கையாண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசை இச்செயற்குழு கண்டிக்கிறது. இத்தீர்ப்பிற்குப் பிறகு அவர்களை தப்புவிக்க சட்டமும் துணை போவதைக் கண்டு இச்செயற்குழு தனது வருத்தத்தை பதிவு செய்கிறது
8. காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகங்கள்.
துரோகம் : 1
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23 நள்ளிரவில்தான் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோரின் சிலைகள் பாபரி மஸ்ஜிதின் உள்வளாகத்தில் வைக்கப்பட்டன. அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தச் சிலைகளை உடனே அப்புறப்படுத்தி , அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமல்லாமல் ஐவேளை தொழவிடாமல் தடுத்து நிறுத்தி பள்ளிவாசலை இழுத்து மூடிய துரோகத்தை காங்கிரஸ்தான் செய்தது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் இந்த அக்கிரமத்திற்கு துணைபோனது.
துரோகம் : 2
1989 ராஜீவ் காந்தி பிரதம அமைச்சராக இருக்கும் போது நாடாளுமன்ற தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்துக்கள் ஓட்டுக்களை பொறுக்குவதற்காக பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்த நிலத்திற்குள் விஸ்வஹிந்து பரிஷத் குண்டர்கள் சிலா நியாஸ் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு வைபவத்தை நடத்துவதற்கு அனுமதிவழங்கியததான் 1992ல் பாபர் மஸ்ஜித் உடைப்பிற்கு காரணமானது. இது காங்கிரஸ் கட்சி செய்த அடுத்த துரோகமாகும்
துரோகம் : 3
1992 பாபரி பள்ளிவாசல் இடிக்கப்படப் போகின்றது என்று உளவுத் துறை தகவல் தெரிவித்தும் மாநில பிஜேபி அரசைக் கலைக்காமல் கரசேவை என்ற பெயரில் இராணுவத்தின் மேற்பார்வையில் இந்துத்துவா சக்தி கயவர்கள் பாபரி மஸ்ஜிதை இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததும் காங்கிரஸ் ஆட்சிதான்.
துரோகம் : 4
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பிறகு அதே இடத்தில் தற்காலிக கோயில் கட்ட அனுமதித்ததும் காங்கிரஸ் அரசுதான்.
துரோகம் : 5
பாபர் மஸ்ஜித் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னால் வெறும் சிந்தனையோட்டமாக மட்டுமே இருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் முதன் முதலாக பள்ளியின் கீழ் கோயில் இருந்ததா? என்பதை ஆய்வு செய்வதற்காக தன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சிக்குரிய வழிகளை ஏற்பாடு செய்தது.. அதுதான் இன்றைய இந்தத் தீர்ப்பிற்கு காரணமாக அமைந்தது. இப்படி அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு துரோகங்களுக்காக காங்கிரஸ் கட்சியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. .
9. தீர்ப்பு எழுதி அதன் மை காய்வதற்குள்ளாக முஸ்லிம்களுக்கென்று ஒதுக்கப்படட மூன்றில் ஒரு பங்கு இடத்தையும் தங்களுக்கு விட்டு விட வேண்டும் என்று கூறி முஸ்லிம்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகின்ற ஆர்எஸ்எஸ் விஹெச்பி பஜ்ரங்தள் பிஜேபி போன்ற இந்துத்துவா அமைப்புகளை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
10. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் தீர்ப்பு வெளியான பிறகு பள்ளிவாசல்கள் புனிதத் தலமல்ல. அந்தப் பள்ளிவாசல்களை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் கையகப்படுத்தி சுகாதாரம் மற்றும் சாலைப் போடுதல் போன்ற பல்வேறு வகைக்கு பயன்படுத்தலாம் என்றும் பாபர் மஸ்ஜித் கட்டப்பட்ட இடம் இராமர் பிறந்த இடம்தான் என்று தீர்க்கப்பட்டது போன்று இனி இதுபோல் காசி விஸ்வநாத் கோயில், பிருந்தாவன் கோயில் விவகாரமும் தீர்க்கப்படவேண்டும் என்றும் கூறிய இந்துத்துவா வெறியன் அரசியல் அனாதை சுப்பிரமணிய சுவாமியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
11. பாபரி மஸ்ஜித் பாணியில் இனி வேறொரு மஸ்ஜிதில் கைவைப்பதற்கு பாசிச சங்பரிவாரக் கும்பமல் முயற்சி செய்தால் அதே பாணியில் முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணித்து பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டார்கள் என்பதை இந்த செயற்குழு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.
12. சட்ட வரம்பைத் தாண்டி மதச் சார்பின்மைக்கு எதிராகவும் மதநம்பிககையின் அடிப்படையிலும் வழங்கப்பட்ட அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும் மேல் முறையீட்டின் போது சட்ட வரம்பிற்கு உட்பட்டு இவ்வழக்கில் தீர்ப்பளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை கோரியும் வருகின்ற ஜனவரி 4 2011 அன்று தமிழகம் தழுவிய அளவில் சென்னையிலும் மதுரையிலும் மாபெரும் பேரணி மற்றும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.
13. பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்கள் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முஸ்லிம்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில் மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு, இந்திய அரசியல் சாசனச் சட்டத்திற்கு உட்பட்டு மேல்முறையீடு செய்யபடும் பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதீமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று இந்தச் செயற்குழு நம்பிக்கைவைக்கிறது.
14. தமிழக வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜுலை 4 2010 அன்று 15 இலட்சம் மக்கள் மத்திய அரசிடம் இந்திய அளவில் இட ஒதுக்கீடு கோரி தீவுத் திடலில் ஒன்று கூடினர். ஒடுக்கப்பட்டோரின் இந்த உரிமை மாநாட்டிற்கு பின்னர் ஏற்பட்ட பிரதமர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சந்திப்பின் போது இக்கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்தனர். அப்போது விரைவில் அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தனர். அந்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றும்படி பிரதமர் மன்மோகன்சிங் அவர்களையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
15. திருவிடைச் சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. அதே நேரத்தில் பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் துதிப்பதையும், தொழுவதையும் தடை செய்து குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியது. இத்தகைய அக்கிரமத்தனமான காரியங்களில் ஈடுபடுவர்கள் மீது பள்ளிவாசல் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்தகையவர்கள் பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பில் இருந்தால் அவர்களை களையெடுக்க வேண்டும் என்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களையும் இஸ்லாமியப் பெருமக்களையும் இநதச் செயற்குழு வாயிலாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டிக் கொள்கிறது.
16. திருவிடைச் சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பது வெள்ளிடை நீர் போல அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியில் உலகமெங்கிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு பெருவருகின்றது. ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் தவ்ஹீத் கொள்கையை பின்பற்றக்கூடிய மக்களாக மாறிவிட்டனர். 2010 ஜுலை 4 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் அணிவகுத்து வந்ததே மிகப் பெறும் சான்றாகும். இதனைப் பொறுக்க முடியாத தவ்ஹீதிற்கு எதிரான சில அமைப்புகள் மற்றும் இலட்டர் பேடு இயக்கங்கள் பள்ளிவாசலில் தொழுவதை தடைசெய்பவர்களையும் குழப்பம் விளைவிப்பவர்களையும் கண்டிக்காமல் திருவிடைச் சேரி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மட்டும் பெரிது படுத்தி, பழியை தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சுமத்தி இதன் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என பகற்கனவு காண்கின்றன. ஆனால் இவர்கள் எவ்வளவுதான் பழி சுமத்தினாலும், திட்டங்கள் தீட்டினாலும் சத்தியக் கொள்கையின் பேரொளியை அணைத்து விட முடியாதென்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தவ்ஹீத் கொள்கைக்கும் எதிரான இவர்கள்தான் காணாமல் போவார்கள் என்றும் இந்த செயற்குழவின் வாயிலாக எச்சரிக்கிறோம்.
17. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பை ஏற்று முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான இந்திய அளவில் இட ஓதுக்கீட்டைப் பெறுவதற்காக தமிழக இஸ்லாமிய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜுலை 4 அன்று சென்னைத் தீவுத் திடலில் சங்கமித்த இலட்சக் கணக்கான இஸ்லாமியப் பெருமக்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும், ஜமாஅத்தார்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கும் இந்தச் செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதற்காக பொருளாதார உதவி செய்த வெளிநாடு, உள்நாடு கொள்கைச் சகோதரர்களுக்கும் அயராது பாடுபட்ட அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் இந்தச் செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
18. தற்போது நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்ம்கள் அனைவரின் எண்ணிக்கையும் விடுபட்டு விடாமல் இருப்பதற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முஸ்ம்கள் மத்தியில் நிகழ்த்துமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் இடம் பெயர்ந்து வாழும் முஸ்ம்களின் எண்ணிக்கையையும் ஒருங்கிணைத்து அவர்களின் மொத்த மக்கட்தொகையளவை வெளியிடுமாறு மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
19. இதற்கென இந்திய வெளியுறவு அமைச்சகத்தையும் மற்றும் வெளிநாட்டு தூதரங்களையும் அணுகி ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தி இடம் பெயர்ந்த இந்தி யர்களின் மொத்த எண்ணிக்கையையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு இந்திய அரசை இச்செயற் குழு கேட்டுக் கொள்கிறது.
20. அடிக்கடி பாலஸ்தீனத்தில் முஸ்ம்களைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேன் காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு அதன் மீது பொரு ளாதாரத் தடையை ஏற்படுத்த உலக நாடு களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்க ளின் உணர்வுகளை மதித்து இஸ்ரேலுடன் உள்ள உறவைத் துண்டிக்குமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
21. முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக் கீட்டில் நடந்த குளறுபடிகளைச் சரி செய்வ தாக தமிழக அரசு முஸ்லிம் சமுதாயத்துக்கு கடந்த தேர்தலின்போது உறுதியளித்தனர். அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுத் ததாகத் தெரியவில்லை. எனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
22. முஸ்லிம்களில் பிற்பட்டவர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டா லும் பிற்பட்ட முஸ்லிம்களும் மற்ற முஸ் லிம்களும் பொதுப் பட்டியலிலும் விண்ணப் பிக்க சட்டப்படி உரிமை இருந்தும் அதிகாரி கள் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து வருகின்றனர். பொதுப் பட்டியலில் உள்ள 3 சத இடங்களிலும் முஸ்லிம்கள் போட்டியிட லாம் என்று தெளிவான ஆணை பிறப் பிக்குமாறு முதல்வரை இச்செயற்குழு கேட் டுக் கொள்கிறது.
23. சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி, கல்விக் கடன் ஆகியவை சென்ற ஆண்டு அதிகாரி களின் ஆணவப் போக்காலும் கல்வி நிலை யங்களின் அலட்சியப் போக்காலும் பெரும் பாலான முஸ்லிம்களுக்கு கிடைக்க வில்லை. அதுபோல் இந்த ஆண்டு நடக்கா மல் இருக்க தெளிவான வழிகாட்டுதலை வழங்கி அலைக்கழிக்காமல் முஸ்லிம் சமுதாயம் பயன் பெற தெளிவான வழிகாட் டுதலை அறிவிக்குமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.










Thursday 7 October 2010

நக்கீரனை கண்டித்து நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டதில் கடந்த 6-10-2010 அன்று நக்கீரனை கண்டித்துநெல்லை சந்திப்பு ரயில்நிலையம் முன்புமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்க்கானோர் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்

Monday 4 October 2010

நக்கீரனை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!


T
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டத்தில் இன்று (4-10-2010) நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.

நக்கீரனை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தில் இன்று (4-10-2010)  நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செருப்பு மற்றும் துடப்பகட்டை போன்றவற்றுடன் வந்து சகோதர சகோதரிகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Friday 1 October 2010

வெள்ளிமேடை தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா?

இன்ஷா அல்லாஹ்  (1-10-2010) வெள்ளி மேடையில் தீர்ப்பா கட்டயப்பஞ்சாயத்தா என்ற தலைப்பில் P.J அவர்கள் உரையாற்றுகின்றார்கள்.
இணையதளத்தில் ( www.onlinepj.com, www.tntj.net )  வெள்ளிமேடை வழக்கம் போல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!