Tuesday 30 November 2010

நெல்லை மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டப் பொதுக்குழு கூட்டம் கடந்த 28-11-2010 அன்று சங்கரன்கோவில் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் தலைமை தாங்கினார்கள். மேலாண்மைக்குழு உறுப்பினர் சைபுல்லாஹ் காஜா அவர்கள் மேற்பார்வையாளாராக கலந்து கொண்டார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பாபர் மஸ்ஜித் தீர்ப்பு பற்றியும் ஜனவரி 27 போராட்டம் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.