Sunday 19 December 2010

அரசு மருத்துவமனை முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஏழை மக்களின் உயிருடன் விளையாடும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் நகரில் நேற்று (17-12-2010) அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகல் 2 மணிக்கு மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத் தலைவர் யூசுப் அலீ தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.ஏ. செய்யது அலீ, பொருளாளர் எஸ்.எம். ஷாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலப்பாளையம் நகரத் தலைவர் ரோஷன், செயலாளர் சிராஜ், பொருளாளர் நிவாஸ், துணைத் தலைவர் அஷ்ரப், துணைச் செயலாளர் ஞானியார் உட்பட ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். தவறு செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன